தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக குறையாமல் இருந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த அவல நிலை உக்ரைன்-ரஷ்யா நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் நயாரா நிறுவன பெட்ரோலியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மற்ற பாரத், ஹிந்துஸ்தான் உள்ளிட்ட நிலையங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 வாகவும், டீசல் லிட்டருக்கு ரூ,94.24 ஆகவும் இன்று (மே 30) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே நயாரா பெட்ரோல் நிலையங்களை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் ரூ.1 குறைத்து விநியோகிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
CSK அணி கோப்பையை வென்றது பிராவோ போட்ட ஆட்டம்…, கடுப்பான மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!!
ஒரே நிறுவன பெட்ரோல் பங்க் நிலையங்களிலே ஒன்றிரண்டு ரூபாய் சேர்த்து விற்பனை செய்து வரும் நிலையில், ரூ.1 குறைத்து வழங்குவதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.