தனது கணவரின், விந்தணுக்களை சேகரித்து அதில் விதவிதமான டிசைன் நகைகள் செய்து, கனடா நாட்டைச் சேர்ந்த பெண் அமாண்டா, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வித்தியாச சிந்தனை:
பெண்களுக்கு நகைகள் மற்றும் அழகுப்படுத்தும் பொருட்கள் என்றால் அலாதி பிரியம். சமீப காலமாக திரைப் பிரபலங்கள் மற்றும் சீரியல் நடிகைகள் பலரும், கர்ப்ப காலத்தில் தங்கள் வயிற்றை பெல்லி காஸ்டிங் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகள் பலர் தாய்ப்பாலில் ஆபரணம் செய்து மகிழ்கின்றனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
ஆனால் அதிலிருந்து ஒரு படி மேலே போய், கனடா நாட்டை சேர்ந்த அமாண்டா என்ற பெண், தனது கணவரின் விந்தணுக்களை சேமித்து அதிலிருந்து விதவிதமான நகைகளை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தனது கணவர் எப்போதும் தனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற பீலிங்கில் இந்த நகை அலங்காரத்தை கையில் எடுத்தாக குறிப்பிட்டுள்ளார்.
தன் கணவரின் விந்தணுக்களை சேமித்து, வித்தியாசமான நகைகளை செய்து அதை அணிந்து கொண்டு, அப்போது எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் முகம் சுழித்தாலும், ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து தங்களுக்கும் நகைகள் செய்து தருமாறு ஆர்டர் செய்து செய்துள்ளனர். இதன் மூலம் அந்தப் பெண், கல்லா கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.