தமிழக பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை – அரசின் நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

0
தமிழக பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் நிலை - அரசின் நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

தமிழகத்தில், மேல்நிலை கல்வி பயிலும் மாணவர்களின் நிலை அரசின் நடவடிக்கையால் கேள்விக்குறி ஆகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொழிற்கல்வி வகுப்புகள்:

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள், அடுத்ததாக 11ம் வகுப்பு செல்லும் போது  தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்வார். அவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப, அவர்களுக்கு தொழிற் பிரிவு மற்றும் பொது பிரிவு பாடங்கள் ஒதுக்கப்படும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொழிற்கல்வி பாடங்களில் வேளாண்மை, பொறியியல், கணக்குப்பதிவியல், செவிலியர் உள்ளிட்ட 9 வகையான பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் பயிற்சியை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தற்போது ஓய்வு பெற்று விட்டதாக சொல்லி பல மாவட்டங்களில், இந்த தொழிற்கல்வி பிரிவு மூடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்த பிரிவுகளை தேர்ந்தெடுத்த மாணவர்களை வேறு படிப்புக்கு செல்லச் சொல்லி வற்புறுத்தல் எழுவதாகவும் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய, பாமக நிறுவனர் ராமதாஸ், அரசு இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here