தமிழகத்தில் சமீப காலமாக பா.ஜ.க. தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க. கட்சியில் பணியாற்றி வந்த காயத்ரி ரகுராம் அண்மையில் தலைவர் அண்ணாமலை, பெண்களை மதிப்பு, மரியாதை இல்லாமல் நடத்தி வருவதாக கூறி கட்சியில் இருந்து வெளியேறினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து பா.ஜ.க. கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் “விருப்பத்தின் பேரில் கட்சியில் இருந்து விலகியவர்கள் பற்றி விவாதிப்பது அனாவசியமானது. அவர் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும். வெளியேறியவர்கள் கட்சியை பற்றி பெருமையாக பேச வேண்டிய அவசியமில்லையே?” என காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுத்தார்.
“Korean” படத்தில் நடிக்கும் கோவை சரளா?.., அவரே வெளியிட்ட தகவல்!!
மேலும் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பேசிய அண்ணாமலையிடம் யூடியூப் செய்தியாளர் கேள்விகளை தொடுத்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பாணியில் “நீ எந்த சேனல், உனக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இடத்தில் செய்தியாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.