அனிதா சம்பத்திற்கு ஆறுதல் அளித்த பிக் பாஸ் போட்டியாளர்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அனிதா சம்பத்தின் தந்தை மரண செய்தி அனைவரையும் கவலையடைய செய்தது. இந்நிலையில் அர்ச்சனா, நிஷா மற்றும் ரேகா போன்றோர் நேரில் சென்று ஆறுதல் அளித்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் அனிதா

பிக் பாஸ் ஆரம்பத்தில் இருந்தே பல சண்டைகளிலேயே ஈடுபட்டு வந்தார் அனிதா. தொடர்ந்து யாராவது ஒரு வார்த்தை சொன்னாலும் அதற்கு 1000 வார்த்தையில் பதிலளிப்பதே அவரது வழக்கமாக வைத்திருந்தார். ஆரம்பத்தில் இவரது திறமைகளை மட்டும் வெளிப்படுத்தி இருந்தால் கண்டிப்பாக இவர் ர்துதி சுற்று வரை வந்திருக்கலாம்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!!

ஆனால் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது. நான் சொல்வது தான் சரி என்று இருப்பது இவ்வாறே வீட்டில் காலம் தள்ளினார். ஆனால் மக்கள் மத்தியிலும் அவருக்கு தனி வரவேற்பு இருந்தது. இதனாலேயே 80 நாட்கள் அந்த வீட்டில் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் அவரது புகைப்படங்கள் அங்கங்கே இருப்பது போலவும் அதில் பல வாசகங்கள் இருப்பது போலவும் ஒரு புகைப்படம் இருந்தது. மேலும் அந்த போட்டோவை பதிவிட்டு அவரது ஹேட்டர்ஸுக்கு பதிலடி கொடுப்பது போல கேப்சன் வைத்திருந்தார். அதாவது நான் 80 நாட்கள் நானாக தான் இருந்தேன். யாருக்கும் சொம்பு தூக்கல, நாடிகல, எனக்கு நெருக்கமானவங்க தப்பு பண்ணலே அதையும் நான் சொல்லிகாமிச்சேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது அனைவர்க்கும் பதிலடி தரும் விதத்தில் இருந்தது.இந்நிலையில் அவரது அப்பாவின் இறப்பு அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளராக இருந்த நிஷா, அர்ச்சனா, ரேகா மற்றும் சுரேஷ் போன்றவர்கள் அனிதாவிற்கு ஆறுதல் அளிக்க வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here