தென்மேற்கு கடலோர மாவட்டங்களில் காற்றழுத்த காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தென்மேற்கு காற்றழுத்தம் காரணமாக கடலோர பகுதிகளான மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுவை போன்ற மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் மிதமான மழையும் மற்றும் உள்ள மாவட்டங்களில் ஊர் இரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். மேலும் நாளை ஓர் இரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். புத்தாண்டு தினத்தன்று தென்தமிழ கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் கடலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் லேசான மழையும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
2.1.21 அன்று கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மேலும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். 3.1.21 அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். மேலும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும்.
‘சித்ராவின் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ – சித்ராவின் தாயார் முதல்வரிடம் மனு!!
அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை சென்னை மாற்றும் பிற பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்சமாக 30டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்ஸியஸ் நிகழும். அடுத்த 48 மணிநேரத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.மேலும் அதிகபட்சமாக 30டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்ஸியஸ் நிகழும்.
மேலும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த கற்று வீசக்கூடும் எனவே கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.