பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களுக்கு Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் யார் ஜெயித்தார்கள் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் வெளியேற போகிற நபர் பற்றிய வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க’ ஆரம்பித்துள்ளது. இத்தனை ஏனோ தானோ என்று விளையாடி கொண்டிருந்தவர்களும் தங்களது முழு திறமையையும் காட்டியுள்ளனர். 96 நாட்களுக்கு பிறகு சூடுபிடிக்கவே ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்கள் ஷிவானி எந்த போட்டியிலும் ஆர்வம் காட்டாத நிலையில் நேற்று அவர் நேற்று விளையாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
நேற்றைய போட்டியின் முடிவில் சோம் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். ரியோ இரண்டாவது இடத்தில் இருந்தார். எப்படியும் சோம் அல்லது ரியோ இந்த இருவரில் யாராவது ஒருவர் தான் ஜெயிப்பார் என்று மக்கள் கணித்திருந்தனர். மேலும் இந்த வாரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் உள்ளனர்.
அனைவருமே கடுமையான போட்டியாளர்கள் என்பதால் யார் ஜெயிப்பார் என்ற கேள்வி அனைவர்க்கும் இருக்க தான செய்தது. போன வாரத்தில் அஜித்துக்கு முன்பாக ரம்யா காப்பாற்றப்பட்டார். ஆனால் ரம்யாவிற்கு முன்னரே ஷிவானி காப்பாற்றப்பட்டார். இது மக்களுக்கு சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியது. இந்த வாரம் முழுக்க தனது முழு திறமையையும் காட்டிய ஷிவானி தான் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.
மேலும் அவருக்கு தான் வோட்டிங்கில் கடைசி இடமும் உள்ளது. கிட்ட தட்ட கடைசி கட்டத்திற்கு வந்திருக்கும் போட்டியாளர்கள் Ticket To Finale டாஸ்கில் அருமையாக விளையாடினர். ஆனால் இந்த தடவை பிஸிக்கல் டாஸ்க் குறைவாகவே கொடுக்கப்பட்டது. அது மழை காரணமாக கூட இருக்கலாம். மேலும் கூடுதல் தகவலாக Ticket To Finale டாஸ்கை சோம் தான் ஜெயித்துள்ளார். மேலும் ஷிவானி இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார்.