பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். தற்போது அவர் படவாய்ப்புகளுக்காக எல்லைமீறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
தமிழில் வெளியான ராஜா ராணி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சாக்ஷி அகர்வால். மேக்கப்பே இல்லாமல் தைரியமாக நடித்திருப்பார்.
அப்பொழுது அதுதான் சாக்ஷி அகர்வால் என்று யாருக்குமே தெரியாது. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் இந்த படத்தில் நடித்தவர் என்றே தெரியும். பிக் பாஸ் வீட்டில் மிகவும் ஆணவத்துடனேயே நடந்துகொண்டார்.
இவருக்கும் அபிராமிக்கு இடையே ஒரு நல்ல நடப்பு இருந்தது. ஆனால் நாளடைவில் ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் கவினும் சாக்ஷி அகர்வாலும் ஆரம்பத்தில் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர்.
இதுவே வீட்டில் பெரிய பிரச்சனையாக வெடித்தது. கவின் சாக்ஷி அகர்வாலை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார். மேலும் சாக்ஷி அகர்வாலை மக்கள் வீட்டை விட்டும் வெளியேற்றினர். அதன் பிறகு வாய்ப்புகளுக்காக பல தூண்டில்களை போட்டு வந்தார்.
ஆனால் தற்போது வரை எதுவுமே ஒர்க்அவுட் ஆகவில்லை. பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். அதாவது உச்சகட்ட கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார். மேலும் இதனால் நெட்டிசன்கள் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.