கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இது அப்பகுதியில் வைரலாகி வருகிறது.
அதிசய குழந்தை:
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் நோய் தொற்று பரவல், அதிகரிக்கும் இறப்பு விகிதம் போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் ஆங்காங்கே சிறு அதிசயங்களும் நிகழ்ந்து வருகிறது. உலகமெங்கும் சமீப காலமாக அதிசய குழந்தைகள் பிறந்து வருகின்றன. 4 கைகளுடனும் 3 கண்களுடனும் குழந்தைகள் பிறந்து ஆச்சயப்படுத்தி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிசய குழந்தை பிறந்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கர்நாடக மாநிலம் ஹொசாபெட் பகுதியில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இது மிகவும் அரிதான சம்பவம் என்றும் குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள் என்றும் மருத்துவர் கூறியுள்ளார். மேலும் குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் நடக்க பழகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.