உலகில் தினசரி மக்களை வியப்பூட்டும் வகையில் ஒரு சில நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. தற்போது அந்த வகையில் லண்டன் பகுதியில் நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.
லண்டன்:
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தற்போது கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதன் காரண்மாக அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாக்கும் வகையில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உலக அளவில் தினசரி புதிது புதிதாக மக்களை வியப்பூட்டும் வகையில் ஒரு சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அவை அனைத்தும் மக்களை ஆச்சர்யமடைய செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதற்கான ஆதாரமும் இணையத்தில் வைரலாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இதேபோல் ஒரே சம்பவம் லண்டனில் அரங்கேறியுள்ளது. அதன்படி லண்டனில் பக்கிங்காம்ஸைர் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். காரணம் அந்த பெண் அதிக எடை கொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளாராம். அதன்படி அந்த பெண் 2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளாராம். மேலும் அந்த குழந்தையை இரண்டு மருத்துவர்கள் வெளியே தூக்கி வந்ததாக கூறப்படுகிறது.