பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தாவின் கணவரை இதுவரையிலும் யாரும் பார்த்திருக்க மாட்டோம். அவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.
பிக் பாஸ் சம்யுக்தா
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் இருந்து 4வது சீசன் வரைக்கும் செம ஹிட். ஒவ்வொரு சீசனிலும் யாரேனும் ஒருவர் மக்கள் மத்தியில் இடம் பிடிப்பர். மேலும் டைட்டிலை கைப்பற்றியவர்கள் கூட கடைசி நேரத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியவர்கள் தான்.
மேலும் 4 வது சீசன் சற்றே வித்தியாசமானதாக இருந்தது. ஏனெனில் இத்தனை வருடங்கள் சீசன் அனைத்தும் ஜூன் மாதத்தில் தான் ஆரம்பிக்கும். ஆனால் 4வது சீசன் அக்டோபர் மாதம் ஆரம்பித்தது. அனைத்து பண்டிகையையும் வீட்டுக்குளேயே கொண்டாடினர்.
இந்த சீசனில் கலந்துக்கொண்டவர் தான் சம்யுக்தா. ஆரம்பத்தில் இருந்தே ஹவுஸ் மேட்ஸ் மனதில் இடம் பிடித்தார். பாலாஜி, ரம்யா பாண்டியன், ஷிவானி, ஆஜித் என ஒரு குரூப்பாக செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் சம்யுக்தாவை அனைவர்க்கும் பிடித்தும் போனது. ஆனாலும் ஆரி, சனம் இடையே சம்யுக்தா மோதிக்கொண்டே இருந்தார். கடைசியில் 50வது நாளில் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவர் தனது மகனை பற்றி தான் அதிகமாக பிக் பாஸ் வீட்டில் பேசியுள்ளார். இவர் கணவர் கார்த்திக் பற்றி அவ்வளவாக கூறியதும் இல்லை. இந்நிலையில் இவர் குடும்பமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.