பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்து முடிந்த பிரஷாந்த் ஐஸ்வர்யா நிச்சயம் – பரிதாபமாகும் கண்ணனின் நிலை!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரஷாந்த் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு நிச்சயம் தற்போது நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலும் இணைந்துள்ளது. கோபி குடும்பமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் ஏற்கனவே சொந்தக்காரர்கள் என்பதால் நெருங்கி பழகி வருகின்றனர்.

இந்நிலையில் கோபி ராதிகாவின் வீட்டிற்கு செல்ல கூடாது என்பதற்காக போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கி கொண்டது ஐஸ்வர்யா, பிரஷாந்த் தான். ஏனெனில் இவர்கள் நிச்சயத்தை இப்பொழுதே வைத்து விடலாம் என்று மல்லியிடம் வற்புறுத்தியதே கோபி தான்.

நிச்சயம் நடக்குமா?? அல்லது ஐஸ்வர்யா இதனை தடுத்து நிறுத்துவாரா?? என பல ட்விஸ்டுகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. தற்போது ஐஸ்வர்யாவிற்கும் பிரஷாந்திற்கும் நிட்சயம் முடிந்துள்ளது.

அந்த ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி என்றால் கண்ணனின் நிலைமை என்ன ஆவது?? ஐஸ்வர்யா இதற்கு எப்படி ஒத்துக்கொண்டார் என்ற பல கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here