விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். கிட்டத்தட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது வரை இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஆரம்பித்த நாளில் இருந்து சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் Bigg Boss மற்றும் Small Boss போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு டாஸ்க்கை வைத்து பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
இதுவரை எந்த டாஸ்க்கிலும் சண்டை போடாத போட்டியாளர்கள், இன்று நடந்த டாஸ்க்கில் வீட்டில் உள்ள கண்ணாடி கதவை உடைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. அதாவது கேஸ் சிலிண்டரை யார் அதிகமாக பாதுகாத்து வைக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள் என்று பிக்பாஸ் அறிவித்த அடுத்த நிமிஷமே இந்த சம்பவம் அரங்கேறுகிறது. கண்ணாடி உடைந்ததை பார்த்த பிக்பாஸ் இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று கோபமாக பேசுவது போல் முதல் ப்ரோமோ அமைந்துள்ளது.