இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக, தென்னிந்திய பகுதிகளான தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தாறுமாறாக எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ சின்ன வெங்காயம் இவ்வளவு கூடிருச்சா??