விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது கடினமான பல டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுத்து கதிகலங்க வைத்துள்ளார் என்றே சொல்லலாம். மேலும் இந்த’ வாரத்திற்கான சுவாரசியம் குறைவாக இருந்த போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையும் வந்துள்ளது. அதில் பாலாவும், சுசித்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
பிக் பாஸ் 4
இந்த வாரத்தில் பிக் பாஸ் மணிக்கூண்டு டாஸ்கை கொடுத்ததால் போட்டியாளர்கள் தங்களை நிரூபிக்கும் பொருட்டு இரவு பகல் என்று பாராது கடினமாக உழைத்தனர். மேலும் மழை, காற்று. வெயில் என அனைத்தையும் தாண்டி அந்த டாஸ்கை செய்தும் முடித்தனர். இதனால் பல சண்டைகளும் உருவானது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
பாலா தனது நேரம் வரும்போது எழுந்திருக்காமல் மறுபடியும் பிரச்சனையை ஏற்படுத்தினார். மேலும் ஷிவானி 24 மணிநேரமும் பாலா பின்னாடியே சுத்திக்கொண்டிருக்க ரம்யா பாண்டியன் அவரை பங்கமாக கலாய்க்கவும் செய்தனர். பாலா மாமானு சுத்தமா டாஸ்குல கவனம் செலுத்தலாம் என்று ஆஜித், சம்யுக்தா கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரத்திற்கான சுவாரசியம் குறைவாக உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க சொல்லி பிக் பாஸ் கூறுகிறார். அதிலும் மதிப்பெண் கம்மியாக இருந்த ரம்யா பாண்டியன், பாலா மற்றும் சுசித்ரா இவர்களில் இருவரை தேர்ந்தெடுக்க சொல்ல போட்டியாளர்கள் பாலா மற்றும் சுசித்ராவை தேர்ந்தெடுக்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் உள்ளே செல்லும் பாலா இங்கு குரூப்பிஸம் நடப்பதாக கூற சுசி அதை மறுக்கிறார். இதனால் பாலாவும் கோவமடைகிறார். இதற்கு அடுத்தும் ப்ரோமோ வெளியானது. அதில் இதனை நாட்கள் ஷிவானி, பாலாவும் சுற்றி திரிந்தனர்.
ஆனால் இப்பொழுது பாலா உள்ளே போனதை அடுத்து ஷிவானி தனியாக அமர்ந்திருக்கிறார். இதனை சம்யுக்தா, ரம்யா கிண்டல் செய்கின்றனர். இதனால் ஷிவானி கடுப்பாகி ஓரிடத்தில் அமர்ந்து பலூனில் ஹார்ட் வரைந்து அதை பறக்க விடுகிறார். மேலும் பாலாஜியிடமே சென்று அடிக்கடி பேசுகிறார்.