விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 இல் இது நாடா?? அல்லது காடா?? டாஸ்க்கில் இரண்டாவது பாகமாக இதுவரை அசுரர்களாக நடித்தவர்கள் அரசர்களாக மாறியுள்ளனர். மேலும் இந்த டாஸ்க்கில் பல சண்டைகளும் ஏற்பட்டுள்ளது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சண்டைக் காட்சிகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. ஏற்கனவே பல மனஸ்தாபங்களுடன் போய்க்கொண்டுள்ள பிக் பாஸில் மேலும் பல டாஸ்குகளை கொடுத்து கைகலப்பு வரும் அளவிற்கு வந்துள்ளது. முந்தைய எபிசோடில் இதேபோல வேல்முருகனை டார்கெட் செய்து பேசி வந்தனர் ஹவுஸ் மேட்ஸ்.
அதனால் ஒரு சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இது நாடா?? அல்லது காடா?? என்ற டாஸ்கில் அரச குடும்பத்தை அசுரர் குடும்பம் கோபமடைய செய்ய வேண்டும். சுரேஷ் அவர்களை அசுரர் குடும்ப தலைவராக நியமித்தது பிக் பாஸ். அவரால் எவ்வளவு செய்ய முடியுமோ அந்த அளவிற்கு ஹவுஸ் மேட்ஸை வைத்து செய்தார். இதனால் பாலாஜிக்கும் மற்றவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த டாஸ்கின் இரண்டாம் பாகமாக அசுரர் குடும்பத்தில் இருந்தவர்கள் அரச குடும்பமாக மாற வேண்டும். இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் ஆரியிடம் வம்பிழுக்கும் அசுரர் குடுபத்தினர் தன் எல்லையை மீறி நடக்கின்றனர். இதனால் ஆத்திரமடையும் ஆரி ‘இந்த விளையாட்டு விளையாடுவதற்கு வேறு ஏதாச்சும் செய்யலாம்’ என்று வார்த்தையை விடுகிறார்.
இதனால் பாலாஜிக்கும் ஆரிக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. மேலும் சனம் மற்றும் சுரேஷ் இடையே பெரிய போர்க்களமே வெடித்துள்ளது. சனம் ஷெட்டியை தாக்கியதில் தெரியாமல் அவர் நெற்றியில் படுகிறது. இதனால் கோவமடையும் சனம் கண்டபடி சுரேஷ் அவர்களை திட்டுக்குகிறார்.
கொஞ்சம் தப்பி இருந்தால் என் கண்ணே போயிருக்கும். மேலும் வாடா, போடா என்றும் கூப்பிடும் அளவிற்கு அவர்களின் சண்டை வெடிக்கிறது. மேலும் அந்த ஆளை வெளியே வர சொல்லு எனக்கும் மனசு இருக்கு என்று கண்டபடி கத்துகிறார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் கண்ஃபெசன் ரூமிற்கு செல்லும் சுரேஷ் தன்னை அனைவரும் டார்கெட் செய்வதாக அழுகிறார். இதுநாள் வரை நான் பொறுத்து கொண்டிருந்தேன் இனிமேல் என்னால் முடியாது என கதறி அழுகிறார்.