சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸும் ஒன்று. தற்போது இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் ரேகா நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இன்று அடுத்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4
மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்டது தான் பிக் பாஸ் சீசன் 4. ஜூன் மாதத்திலேயே தொடங்க இருந்த பிக் பாஸ் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிக் பாஸ் தொடங்கி வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்துள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
நேற்றைய எபிசோடில் மக்களின் வாக்கு எண்ணிக்கையின் படி ரேகா வீட்டை விட்டு வெளியேறினார். இது ஹவுஸ்மேட்ஸ் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. குக் வித் கோமாளி ரேகாவின் கோவமான முகத்தை பார்த்த நமக்கு பிக் பாஸ் ரேகாவின் முகம் வேறுபட்டதாக இருந்தது. மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று வரும் வேளையில் இப்படி எலிமினேட் ஆனது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது அடுத்த வாரம் வெளியேறப்போகும் நபருக்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் ஆரி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர்.
வீட்டிற்கு குடித்து விட்டு தள்ளாடியபடி வரும் மூர்த்தி – தனம் எடுக்கப்போகும் முடிவு என்ன??
இந்த வாரம் சனம் மற்றும் வேல் முருகனை நாமினேட் செய்ய முடியாது. ஏனெனில் போன வார டாஸ்கில் இருவரும் வெற்றி பெற்றதால் இவர்களை நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் அறிவித்துள்ளது. இதற்கடுத்து பிக் பாஸ் இன்று ஹவுஸ் மேட்ஸ்களுக்கு வழக்கம் போல டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது ஒரு வட்டத்தில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் இருக்கும்.
அதனை சுற்றி விட்டால் யார் புகைப்படத்தில் அம்பு குறி நிற்கிறதோ அவர்களிடம் மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்கலாம். அதில் நிஷா, ரியோ, ரம்யா பாண்டியன் இடம் யாரை வெளியேற்ற நாமினேட் செய்வீர்கள்?? என்று கேட்டதற்கு வேல் முருகனை கூறியுள்ளனர்.
மேலும் ‘நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்’ இந்த பட்டத்தை யாருக்கு கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு நிஷா வேல்முருகனையே கூறியுள்ளார். இதனால் வேல் முருகன் கோபமடைந்து சண்டையிடுகிறார். இதிலிருந்து இனி வரும் எபிசோடுகளில் தரமான பல சம்பவங்கள் நமக்காக காத்துக்கொண்டிருப்பது தெரிகிறது.