கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவிற்கு திருமணத்திற்கு பிறகு எதிர்பார்த்த அளவு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக நடித்த ‘ஜானு’ உட்பட சில திரைப்படங்களும் தோல்வியை தழுவியதால் மார்க்கெட் சரிந்தது. தற்போது அதனை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா:
தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் சமந்தா. அதன்பிறகு அதர்வாவுடன் ‘பானா காத்தாடி’ படத்தில் நாயகியாக நடித்தார். இதில் அவரது நடிப்பு அதிகளவு பேசப்பட்டதால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதற்கடுத்து விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இதனால் தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்தார்.
அவரது மார்க்கெட்டும் உச்சத்திற்கு சென்றது. பின்னர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். 33 வயதான சமந்தா இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. மற்ற நடிகைகளை போல் இல்லாமல் ஜிம்முக்கு சென்று தனது உடலை பிட்டாக வைத்திருக்கும் சமந்தா, கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக உள்ளார்.
அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்கு இவ்வாறு செய்வதாக கலாய்த்து வருகின்றனர்.
மேலும் திருமணத்திற்கு பின்னர் பல நடிகைகள் கவர்ச்சி பாதையை விட்டு விட்டு குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பது தான் வழக்கம். ஆனால் சமந்தா அதற்கு விதிவிலக்காக உள்ளார். அவர் லேட்டஸ்ட் ஆக வெளியிட்ட புகைப்படத்தில் பின்னழகு தெளிவாக தெரிவதாக ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.