பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி கொஞ்சம் கொஞ்சமாக தனது வீம்பில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் வெண்பாவின் சூழ்ச்சியால் மீண்டும் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வெண்பாவின் கர்ப்பத்திற்கு மட்டும் பொறுப்பேற்று கொண்ட பாரதி, கண்ணம்மாவை மட்டும் இப்படி டீலில் விட்டு விட்டார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. அதாவது அவரது மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறக்க அதை பார்க்க வந்த கணவர் குடித்துவிட்டு இது என்னோட பிள்ளை இல்லை என்று சொல்லி சண்டை போடுகிறார். இதனால் கோபமடைந்த பாரதி அந்த ஆளிடம் சண்டை போட்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் படி சொல்கிறார்.
இதனால் கோபமடையும் கண்ணம்மா நீங்க எப்போ சார் எடுக்க போறீங்க என்று குத்தி காட்டும் படி சொல்கிறார். இந்நிலையில் பாரதியின் மனசாட்சியும் இது சரி தான் என்று சொல்கிறது. அப்படியானால் வெண்பாவின் முகம் வெட்டவெளிச்சமாக போகிறது. உண்மையை தெரிந்து கொண்டு பாரதி கதற போகிறார். எப்படியும் கூடிய விரைவில் முடிவடைய தான் போகிறது.