விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி தொடரில் இனி நடக்கப் போகும் விறுவிறுப்பான காட்சிகள் குறித்த சர்ச்சைக்குரிய போட்டோ ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வைரல் போட்டோ :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், எதிர்பாராத திருப்பங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பாக்யாவை விவாகரத்து செய்த கோபி, ராதிகாவை முறைப்படி திருமணம் செய்ய தயாராகிறார். ராதிகா வீட்டார் நடத்தும் இந்த திருமணத்தை, கோபியின் பெற்றோர் தடுக்க நினைத்து, கடைசி வரை ஒன்றும் கதையாகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையெல்லாம் தாண்டி, இந்த திருமணத்திற்கான கேட்டரிங் ஆர்டரை பாக்யா எடுத்துள்ளார். இப்படி டுஸ்டுக்கு மேல் டுவிஸ்டாக போன இந்த சீரியலில், ஒரு வழியாக திருமணத்திற்கான ப்ரோமோ வெளியாகிவிட்டது. கல்யாணத்தை தடுக்க , கோபியின் அம்மா மற்றும் மகள் கிளம்பி மண்டபம் வருகின்றனர்.
நொடி பொழுதில் தாலி கட்டும் கோபி.., ராதிகாவை கேவலப்படுத்தி மானத்தை வாங்கிய ஈஸ்வரி!!
இந்த நிலையில், எழில் கோபியின் மார்போடு எட்டி உதைத்து திருமணத்தை நிறுத்தும் படியான போட்டோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், இது உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோ, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.