மகாலக்ஷ்மி கிட்ட இருந்து எனக்கு இந்த ரெண்டு தான் லாபம்.., உண்மையை உடைத்த ரவீந்தர்!!

0
மகாலக்ஷ்மி கிட்ட இருந்து எனக்கு இந்த ரெண்டு தான் லாபம்.., உண்மையை உடைத்த ரவீந்தர்!!
மகாலக்ஷ்மி கிட்ட இருந்து எனக்கு இந்த ரெண்டு தான் லாபம்.., உண்மையை உடைத்த ரவீந்தர்!!

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மஹாலக்ஷ்மி இருவருக்கும் திருமணமாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் இன்னும் இவர்கள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த பேட்டிகள் மூலம் பல விஷயங்களயும் ஷேர் செய்து வருகின்றனர்.

ரவீந்தர்-மகாலட்சுமி

கடந்த செப்டம்பர் 1ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும், டிவி சீரியல்களில் நடித்து வரும் மஹாலக்ஷ்மிக்கும் திருமணம் நடந்தது. ரவீந்தர் குண்டாக இருப்பதால், அவரை எப்படி அழகாக இருக்கும் மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என பலரும் இணையத்தில் அவரை உருவ கேலி செய்து வந்தனர். மேலும் மஹாலக்ஷ்மி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார், என ஏராளமான விமர்சனங்கள் வந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில், உண்மையான காதலுக்கு முன்பு உருவம் எல்லாம் ஒன்றுமே இல்லை. காதல் உண்மையாக இருந்தால் அனைவருக்கும் அழகான பெண் கிடைக்கும் என நச்சென்று பதில் கூறி இருந்தார் ரவீந்தர். இருப்பினும் நெட்டிசன்கள் இவர்களை சும்மா விடுவதாக இல்லை. இணையத்தில் எங்கு திரும்பினாலும் இவர்களின் பேச்சு தான். இந்த வகையில் திருமணத்திற்கு பிறகு மஹாலக்ஷ்மிக்கு, ரவீந்தர் 300க்கும் அதிகமான பட்டு புடவைகள், பெரிய வீடு, தங்க நகைகள் மற்றும் ஆடி கார் என பல பரிசுகளை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

பிரபல சன் டிவி 90ஸ் குழந்தை நட்சத்திரம் திடீர் தற்கொலை – நொடி பொழுதில் தகர்ந்த சினிமா கனவு!!

இந்நிலையில் இந்த பேச்சுக்கள் குறித்து ரவீந்தர் பேட்டி ஒன்றில் கூறியது, மஹாலக்ஷ்மியிடம் ஏற்கனவே ஆடி கார் உள்ளது. மேலும் மஹாலக்ஷ்மி அவருடைய வீட்டில் ஏராளமாக பொருட்கள் சேர்த்து வைத்துள்ளதாகவும் தனக்கு திருமணத்தின்போது இரண்டு மோதிரங்கள் மட்டுமே போட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும திருமணத்திற்கு முன்பும் எந்த பரிசும் மஹாவிற்கு கொடுக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here