விஜய் டிவியில் வெளியாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்து வரும் நடிகை கண்மணி இந்த சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் தற்போது கூறியுள்ளார்.
நடிகை கண்மணி மனோகரன்:
மாடலிங் துறையில் அசத்தி வந்தவர் நடிகை கண்மணி மனோகரன். அதன் பின்னர் நிறைய குறும்படங்கள், ஆல்பம் பாடல்கள் மற்றும் விளம்பரப்படங்கள் ஆகியவற்றில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார். பின்னர் விஜய் டிவியில் பேமஸ் சூப்பர் ஹிட் தொடரான பாரதி கண்ணம்மா தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த சீரியலில் தொடங்கிய நாட்களில் இருந்து இவர் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆனால் அவருக்கு நாளாக நாளாக அவரின் கதாபாத்திரத்துக்கு வரவேற்பு இல்லாமல் போனது. மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய தொடரில் நடிக்க உள்ளார் கண்மணி. அதனால் அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளார். தற்போது அதற்கான காரணத்தை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ‘ பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்த அஞ்சலி கதாபாத்திரத்தை நான் மிகவும் மிஸ் செய்வேன் என்றும் இந்த தொடரில் 3 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த சீரியல் தான் என்னை எனது ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் பாரதி கண்ணம்மா தொடரால் நான் எனக்கு வந்த நிறைய வாய்ப்புகளை இழந்து விட்டேன் அதனால் தான் தற்போது சீரியலில் இருந்து விலகி வெளியே வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்