24 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும் விமான சேவைகள் – விரைவில் அதிரடி தளர்வுகள்!!

0
24 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும் விமான சேவைகள் - விரைவில் வெளியாகும் அதிரடி தளர்வுகள்!!
24 மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பும் விமான சேவைகள் - விரைவில் வெளியாகும் அதிரடி தளர்வுகள்!!

இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருவதால், கடந்த 2 ஆண்டுகளாக கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்த விமான சேவை, இனி வழக்கமான முறையில் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமான சேவை:

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவல், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. விமான சேவை மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக, சர்வதேச விமானங்கள் அனைத்தும் ஏர் பபுள் முறையில் இயக்கப்பட்டன. தற்போது, வைரஸ் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால், இனி வழக்கமான முறையில் விமானத்தை இயக்க மத்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை மற்றும் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், மத்திய உள்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தை அடுத்து, வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here