விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ வில் பாரதி எடுத்த முடிவு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியான வெண்பா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அதைக் காரணம் காட்டி கல்யாணம் பண்ண சொல்லி பாரதியை பிளாக்மெயில் பண்ணுகிறார். இந்த விஷியத்திற்கு பாரதி ஒத்துக்கொள்ளாததால் வெண்பா வழக்கம் போல் புது பிளான் ஒன்றை கையில் எடுக்கிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது பாரதியை தன் வலிக்கு கொண்டு வர விஷயத்தை குடித்து மயங்கி விடுகிறார். அப்போது பார்த்து பாரதி வெண்பா விற்கு கால் செய்ய மொபைல் சுவிட்ச் ஆஃப் என்று வருவதால் உடனடியாக வீட்டிற்கு செல்கிறார். அங்கு வெண்பா மயங்கி கிடந்ததை பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறார்.
பிறகு கண் முழித்த வெண்பா என்ன எதுக்கு காப்பாத்துன பாரதி என சத்தம் போடுகிறார். பிறகு நான் எப்போது வேண்டுமானாலும் சாகத்தான் போறேன். அப்படி நான் வாழனும்னு நெனச்சா என் கழுத்துல தாலி கட்டு என மீண்டும் மிரட்டுகிறார்.
யாருமா இது சின்ன வயசு நயன்தாரா மாதிரி.., ஆச்சு அசல் நயனை உரித்து வைத்திருக்கும் அனிகா சுரேந்தர்!!
அதனால் பாரதி என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் வெண்பாவை திருமணம் செய்து சம்மதிக்கிறார். இதனால் வெண்பா தான் நினைத்தது நடந்து விட்டது என்ற உற்சாகத்தில் இருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. ஆனால் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் கண்ணம்மா என்ன செய்யப் போகிறார் என இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.