விஜய் டிவியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மா பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா இந்த வாரத்திற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதிலிருந்து வெண்பாவை பற்றிய உண்மை கூடிய விரைவில் அனைவர்க்கும் தெரிய வரப் போகிறது என்று தெரிகிறது.
பாரதி கண்ணம்மா
நேற்றைய எபிசோடில் பாரதி டெஸ்ட் எடுக்க ஒத்துக்கொண்டு கிளம்பிய நேரத்தில் வெண்பா வந்து அவரை போக விடாமல் தடுத்து விடுகிறார். இதனால் கடுப்பாகும் சௌந்தர்யா மற்றும் அகில் வெண்பாவை வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.
மேலும் வெண்பா பற்றி அகிலனுக்கு சந்தேகம் எழுகிறது. இதனால் வெண்பா பற்றிய உண்மையை அகிலன் கூடிய விரைவில் கண்டுபிடிப்பார் என்று தெரிகிறது. மேலும் தனது அத்தைக்கு லெட்டர் அனுப்ப வரும் கண்ணம்மாவை வெண்பாவின் ஆட்கள் துரத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து கண்ணம்மா தப்பித்து விடுகிறார்.
இன்றய எபிசோடில் கண்ணம்மா எழுதிய லெட்டர் சௌந்தர்யாவிற்கு கிடைக்கிறது. அதன் பிறகு கண்ணம்மா ஹாஸ்பிடலுக்கு செக்கப்பிற்கு வருகிறார். இதனை ஒரு நர்ஸ் சௌந்தர்யாவிற்கு போன் செய்து கூறுகிறார். சந்தோஷத்தில் கண்ணம்மாவை தேடி வரும் சௌந்தர்யாவால் கண்ணம்மாவை காண முடியவில்லை.
தற்போது வெளியான ப்ரோமோவில் பாரதி, கண்ணம்மாவை தேடி பெட்ரோல் பங்க் வருகிறார். அவரை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடும் படி கேட்கிறார். கண்ணம்மா அதற்கு பதிலடி தரும் விதத்தில் குழந்தை பிறந்ததும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து இந்த குழந்தைக்கு நீதான் அப்பா!! என்பதை நிரூபித்து விட்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுகிறேன் என்று கூறி செல்கிறார்.
இதிலிருந்து சில விறுவிறுப்பான கட்டங்கள் நமக்கு காத்திருக்கிறது என்பது தெரிகிறது. ரசிகர்களும் எப்பொழுது வெண்பாவை பற்றிய உண்மை தெரிய வரும்?? என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். இனி வரும் எபிசோடுகளில் இதற்கான விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.