ராதிகா – கோபி திருமண விழாவில் ராமமூர்த்தி பேத்தி இனியாவை வைத்து கல்யாணத்தை நிறுத்து காய் நகர்த்தி வருகிறார்.
பாக்கியலட்சுமி அப்டேட்
விஜய் டிவியில் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் சீரியலில் பாக்கியலட்சுமி ஒன்றாக உள்ளது. இந்த சீரியலில் தற்போது கோபி, ராதிகா திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் பாக்கியா மேடையில் கோபி, ராதிகா திருமண கோலத்தில் இருப்பதை பார்த்து மிகவும் அதிர்ந்து போகிறார். அப்போது கோபியின் தந்தை மஹாலுக்கு வர திருமண கோலத்தில் இருக்கும் மகனை அடித்து கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறார்.
ஆனால் ராதிகா மயக்கத்தில் திரியும் கோபிக்கு தான் செய்வது தான் சரி என்ற ஆணவத்தில் தந்தை என்று பார்க்காமல் கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார். இதை பொறுத்து கொள்ள முடியாத பாக்கியா தனது மாமனாரை அங்கிருந்து அழைத்து செல்கிறார்.இப்படி கதைக்களம் இழுத்துக் கொண்டே போக இனி வரும் எபிசோடுகளில் தான் சூடு பிடிக்க உள்ளது.
8 வருடங்கள் கழித்து குட் நியூஸ் சொன்ன விஜய் பிரபலம்.., வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!!
அதாவது இனி ராமமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இனியாவை வைத்து கல்யாணத்தை நிறுத்துவார் என தெரிகிறது. யார் சொன்னாலும் கேட்காத கோபி இனியா சொன்ன கேட்டு தான ஆகணும் என்ற நினைப்பில் இந்த முடிவை எடுக்க போகிறார். ஆனால் இது மட்டும் நடந்தால் ராதிகாவின் நிலைமை தான் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.