இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினர் பல பேருக்கு இளநரை பிரச்சனைகள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தலைமுடிகளை சரிவர பார்ப்பரிக்காமல் இருப்பதே. ஆனால் இதனை ஆரம்பத்திலேயே விட்டு விட்டால் 30 வயதிலேயே முழுமையாக நரைத்து விடும். இப்பொழுது நரைமுடி பிரச்சனைகளை தவிர்க்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
நரை முடியை தடுக்க..
உடலில் இரும்பு சத்துக்கள் குறைபாட்டால் முடிகள் வலுவிழந்து போகிறது. நாம் தலை முடிக்கு எவ்வளவு பராமரிப்புக்களை கடைபிடித்தாலும் அதனை நம் உணவு பழக்கத்திலும் கொண்டு வர வேண்டும். இப்பொழுது இளநரை பிரச்னையை தீர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை
சிவப்பு செம்பருத்தி
எலுமிச்சை சாறு
பீட்ருட்
காபி தூள்
செய்முறை
அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீரை சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் எடுத்து வைத்துள்ள காபி தூளை அதில் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். இப்பொழுது மிக்ஸியில் கருவேப்பிலை, எலுமிச்சை சாறு, செம்பருத்தி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை அடுப்பில் இருக்கும் காபி தூள் கலவையுடன் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வைக்கவும். இது ஒரு மணி நேரம் கழித்து ஆறிவிடும்.
மேலும் இதனை 12 மணி நேரத்திற்கு பிறகே பயன்படுத்த வேண்டும். இதனை வடிகட்டியும் பயன்படுத்தலாம். இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலுக்கு போஷாக்கு அளிக்கும். மேலும் கூந்தலில் இருக்கும் நரை முடியை நிரந்தரமாக மாற்றும். இதனை ஒரு மாதத்திற்கு 3 முறை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.