தமிழகத்தில் வருமானம் குறைவாக தரும் டாஸ்மாக் மற்றும் தகுதியில்லாத கடைகள் உள்ளிட்ட 500 மதுபானக் கடைகளை மூட இருப்பதாக சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை அறிக்கையில் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்கான வேலைகளில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இதை கேட்ட மதுபிரியர்கள் ஷாக்கிங் அடைந்த நிலையில், மேலும் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனால் பெரும்பாலான குடிமகன்கள் பீர் குடிக்க ஆரம்பித்து விட்டனர். ஏன் சொல்லப்போனால் கடைக்கு பீர் பெட்டிகள் இறங்கிய அடுத்த நொடிகளில் பீர் காலியாகி விடுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்ட போது, தற்போதைய சூழ்நிலையில் மதுபிரியர்கள் பீர் குடிக்கவே விரும்புகின்றனர்.
கடைகளில் இறங்கியவுடன் பெட்டிகள் காலியாகுவதால், சில குடிமகன்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. மேலும் அதிகம் பிராண்டுகளை கேட்டு டெப்போவுக்கு தினமும் தகவல் தெரிவிக்கிறோம். இருப்பினும் சில பிராண்டுகள் மட்டுமே அனுப்புகிறார்கள். இதனால் விரும்பும் பிராண்டுகளை வாங்க முடியாமல் வாடிக்கையாளர்கள் வருத்தமடைகின்றனர்.
fack நியூஸ் நாய்களா.., இவரு என்னைக்கும் நல்லா இருப்பார்.., ரோபோ சங்கர் குறித்த வதந்திக்கு warning!!
கடந்த சில நாட்களாக பீர் கிடைக்காமல், டின் பீர் இருக்கு என்று சொன்னால் அடுத்த கடையை நோக்கி ஓடுகிறார்கள். அடுத்த கடைகளிலும் இல்லையென்று ஆன போதிலும் கிடைக்கிற பீரை குடித்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.