நாடு முழுவதும் காய்கறி, கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சமாளிக்கும் வகையில் ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி (DA) உயர்வை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதத்திற்கான DA 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான், கோவா, பீஹார் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் DA உயர்வை அறிவித்து வருகிறது. மறுபுறம் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) இமாச்சல், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மீண்டும் அமல் படுத்தி வருகின்றனர். இப்படி தேர்தலில் வாக்குறுதி அளிக்காத மாநிலங்களில் கூட OPS மற்றும் DA உயர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., தமிழகத்தில் கடுமையான பீர் தட்டுப்பாடு!!
ஆனால் தமிழகத்தில் தி.மு.க. சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தும் இதுவரை அதற்கான முயற்சி மேற்கொள்ளாதது ஏன்? என அரசு ஊழியர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இனியும் தாமதிக்காமல் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அறிவிக்க வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்து வருகின்றனர்.