ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை பங்கேற்று வரும் இந்தியா அணி வீரர்கள் 5 பேர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறி வெளியே சென்றுள்ளதாக புகார் வந்துள்ளது. தற்போது இதற்கு காரணம் ரோஹித் சர்மாவா?? என்றும் மூத்த வீரர் ரோஹித் சர்மா இப்படி செய்ய அனுமதிக்கலாமா??என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது பிசிசிஐ
ஆஸ்திரேலியா சுற்று பயணம்:
தற்போது இந்தியா அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்க்கண்டது. ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. மேலும் தனது தனிமை படுத்துதலின் காலம் முடிவடைத்ததால் ரோஹித் சர்மா இந்தியா அணியுடன் இணைத்துள்ளார். இதன் பிறகு ஓர் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்தியா அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரிஷாப் பாண்ட், ப்ரித்வி ஷா, சுப்மங் கில் மற்றும் சைனி ஆகிய ஐந்து பேரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள். தற்போது இருக்கும் விதிமுறையின் படி வீரர்கள் தங்களது ஏரியின் தளத்தை விட்டே வெளிய செல்ல கூடாது என்பதாம். ஆனால் வீரர்கள் ஐந்து பெரும் வெளியே சென்று ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். மேலும் அங்கு சென்ற அவர்கள் ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்தும் மேலும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பிசிசிஐ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
#INDvsAUS பிரிஸ்பேனில் கடும் கட்டுப்பாடு விதிப்பு – இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க மறுப்பு!!
தற்போது வெளியே சென்ற ஐந்து வீரர்களின் ரோஹித் சர்மா தான் மூத்த வீரர். வெளியே செல்வதற்கு இவர் தான் காரணமாக இருப்பாரோ என்று சிலர் கூறி வருகின்றனர். மேலும் ரோஹித் அணியில் சேர்ந்த பின்பு தான் இது போல் சம்பவம் நடக்கிறது என்று சிலர் ரோஹித்திற்கு எதிராக பேசி வருகின்றனர். ஆனால் சிலர் விராட் கோஹ்லி மற்றும் பாண்டியா தடைகளை மீறி வெளியே சென்று ஷாப்பிங் செய்துள்ளார்கள் என்று பதிவுபடுத்துகின்றனர். எனவே இது குறித்து பிசிசிஐ விரைவில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க படுகிறது.