விஜய் எதுல கப்பு வாங்க போறாரான்னு பார்ப்போம்.., தளபதி அரசியல் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்!!

0
தளபதி அரசியல் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் தான் லியோ. கிட்டத்தட்ட 600 கோடி வசூலித்த இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி நைசாக நகர்ந்து சென்றார்.
ஆனால் அவர் அரசியல் குறித்து பேசினாரா? இல்லை சினிமாவை பற்றி பேசினாரா? என்று பலருக்கும் குழப்பம் இருந்தது. இந்நிலையில் ஒரு திரைப்படத்திற்காக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பயில்வான் ரங்கநாதனிடம் விஜய் பேசியது கேட்கப்பட்டது. அதற்கு அவர், விஜய் சினிமால கப் வாங்கப்போறாரா இல்ல, அரசியல்ல கப் வாங்க போறாரா என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்ப்போம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here