மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதில் கட்டுப்பாடு…, அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

0
மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்துவதில் கட்டுப்பாடு
இன்றைய காலகட்டத்தில் அரசு பணிக்கும், பெரும்பலான கல்லூரிகளுக்கும் சேர்வதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் பயிற்சி வகுப்புகளில் இணைந்து தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவ்வாறு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உத்திரப்பிரதேச அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, கோச்சிங் நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுகள், ஈவ் டீசிங் உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்காமல் தவிர்க்க மாலையில் தாமதமாக மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் மாணவிகள் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என உத்திரப்பிரதேச அரசு கோச்சிங் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here