ஸ்கூலில் மறுபடியும் சந்தித்து கொள்ளும் பாரதி கண்ணம்மா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவுடன் நெருக்கமாக பழகும் கண்ணம்மா இன்று பாரதியார் வேடமணிந்து மேடையில் பேச உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பாரதி மற்றும் சௌந்தர்யா வருகிறார்கள் என்பதை தெரியாமல் தயாராகிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஸ்கூலுலில் நடக்கும் காம்பெடிஷனில் கலந்துகொள்ள தயாராகும் கண்ணம்மா அதற்காக படித்துக்கொண்டுள்ளார். அப்பொழுது ஹேமா வீட்டில் இருந்து பாரதியும், சௌந்தர்யாவும் வருகின்றனர்.

சௌந்தர்யா ஹெட் மாஸ்டரிடம் சமையல் ஆண்ட்டி பற்றி விசாரிக்க அது கண்ணம்மா தான் என்று யாருக்கும்தெரியவில்லை. அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு கண்ணம்மாவின் பெயரும் தெரியவில்லை. அடுத்து கண்ணம்மாவின் பெயரை அழைக்க பாரதியை பார்த்து அதிர்ச்சியடைய பாரதிக்கு கண்ணம்மாவை அடையாளம் தெரியவில்லை.

கண்ணம்மா பேசிக்கொண்டிருக்கும் போது பேப்பர் பறந்து போக பாரதி மேல் இருக்கும் கோவத்தை பேசி தீர்க்கிறார். பாரதியை பற்றி மறைமுகமாக திட்டி தீர்க்கிறார். பாரதிக்கு கண்ணம்மாவின் நியாபகம் வர குழப்பமடைகிறார். மேலும் கண்ணம்மா சமூகத்தில் பெண்கள் படும் பாடினை உணர்ச்சிவசப்பட்டு சொல்ல அரங்கமே எழுந்து கை தட்டுகிறது.

மேலும் சௌந்தர்யா கால் வந்தவுடன் அங்கிருந்தும் சென்று விடுகிறார். கண்ணம்மா தான் போட்டியில் வெற்றியும் பெற்றார். ஹேமா அதனை அறிவிக்க மேடைக்கு வந்து பாரதி கையால் பரிசை வாங்கும் கண்ணம்மாவிற்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. எரிச்சலுடன் அதனை பார்க்கிறார்.

கண்ணம்மா அங்கிருந்து சென்ற உடன் சௌந்தர்யா வருகிறார். ஹேமா எங்கே போனீங்க என்று சௌந்தர்யாவை கோவித்துக்கொள்ள கண்ணம்மாவை பார்பரா?? மாட்டாரா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here