பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடிக்கும் ரோஷினி ஹரிப்ரியன் மறைந்த நடிகை சித்ராவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோஷினி, சித்ரா
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிப்பவர் தான் ரோஷினி. இவருக்கு தற்போதெல்லாம் ஏகப்பட்ட ரசிகர்கள் என்றே சொல்லலாம். கண்ணம்மா சீரியலில் நடித்த பிறகு தான் இவருக்கு இவ்வளவு பெயரும் புகழுமே கிடைத்தது. அந்த காலத்தை போல புருஷன் திட்டினால் அழுதுகொண்டிருக்காமல் தன்னை சந்தேகப்பட்டவனை உதறி தள்ளிவிட்டு தனி ஆளாக தனது மகளை ஆளாக்குகிறார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் தான் இந்த கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடித்து போனது. இந்த பாரதி எப்பொழுது மனம் திருந்தி வருவார் என காத்துக்கொண்டுள்ளனர். அப்பொழுதும் கண்ணம்மா பாரதியை ஏற்றுக்கொள்வாரா?? என்ன நடக்கும் என்பதே ட்விஸ்டு தான்.
ஊரடங்கு மேலும் நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த மாநில அரசு!!
இப்படி இருக்க தற்போது கண்ணம்மா ரோஷினியின் இன்ஸ்டா பக்கத்தில் மறைந்த நடிகை சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்ராவும் கண்ணம்மாவும் இந்த அளவுக்கு நெருங்கிய தோழிகளா?? என பலரும் வியந்து வருகின்றனர்.