புதிய ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் சற்றுமுன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஊரடங்கு மேலும் நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த மாநில அரசு!!
புதிய ரேஷன் அட்டைகளுக்கு 2000 ரூபாய்:
தேர்தலின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், தற்போது அதன் முதல் தவணையான ரூபாய் 2000 முழு ஊரடங்கு காரணமாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதை தொடர்ந்து இப்போது தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்ற கொரோனா நிவாரண நிதி புதிய ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2,14,950 புதிய ரேஷன் அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் வெளியிட்டார். இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.