இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.
ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இறந்த 24 வயது இரட்டையர்கள் – உ.பி யில் அரங்கேறிய சோகம்!!!
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதுமட்டுமல்லாமல் சுமார் 1 மாத காலமாகவே கொரோனவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.இருந்தும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதன் காரணமாக ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கை தற்போது மாநில அரசு நீட்டித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவித்துள்ளது.அதன்படி திருமணம் நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வங்கிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே ஊரடங்கில் மக்கள் வெளியே வர அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.