கண்ணம்மா, துர்காவை கொலை செய்ய தீவிரமாக திட்டம் தீட்டும் வெண்பா – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து தப்பித்து விடுகிறார் துர்கா. இதனால் வெண்பா மிகவும் பதட்டமடைகிறார். இன்றைய எபிசோடில் பாரதி, வெண்பாவை குழந்தையின் பெயர் விழாவிற்கு அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தைக்கு டிரஸ் எடுக்க போகும் பாரதி கண்ணம்மாவின் குழந்தை என்று தெரியாமல் தூக்கி கொஞ்சுகிறார். இடையில் கண்ணம்மா வர அதனை பார்த்து கோபமடைந்து அங்கிருந்தும் செல்கிறார். மேலும் ஜெயிலில் இருந்து துர்காவும் தப்பிக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அறிந்த வெண்பா பதட்ட நிலையில் இருக்க துர்கா வீட்டிற்கு வந்து மிரட்டி தனக்கு தாலி கட்டுவது போல கனவு காணுகிறார். இன்றைய எபிசோடில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணம்மாவிற்கு வழக்கம்போல திடீரென மயக்கம் ஏற்படுகிறது. போட்ட ஊசியால் இந்த மாதிரி நடக்கிறது.

என்ன செய்வது என்று புரியாமல் கண்ணம்மா திணறிக் கொண்டிருக்க குழந்தை வேறு அழுகிறது. எப்படியோ தாங்கி தடுக்கி குழந்தையை தூக்குகிறார். அங்கிருப்பவர்கள் வீட்டில் யாரும் இல்லையா?? என்று கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல் அங்கிருந்து நகர்கிறார். மேலும் குழந்தையிடம் உனக்கு பெரிய குடும்பம் இருப்பதாகவும், இங்கு இப்படி கேட்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம் என்றும் கூறுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக துளசி சௌந்தர்யாவிற்கு கால் செய்து நாளை மறுநாள் கண்ணம்மா குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை நடத்தப்போவதாக கூறுகிறார். இதனால் சௌந்தர்யாவும் சந்தோஷமடைகிறார். அடுத்ததாக வெண்பா அந்த ஆசிரமத்தில் கண்ணம்மாவிடம் சண்டைபோட்ட பெண்ணிடம் குழந்தையையும், கண்ணம்மாவையும் வேகமாக கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று கூற அந்த நேரத்தில் பாரதியும் உள்ளே நுழைகிறார்.

இதனால் வெண்பா அதிர்ச்சியடைகிறார். ஆனால் பாரதி எதையும் கேட்கவில்லை. குழந்தை பெயர் வைக்கும் விழாவிற்கு வெண்பாவை அழைக்கிறார். ஆனால் வெண்பா யாரோ ஒரு குழந்தைக்கு ஏன் இப்படி பண்றீங்க. அதை பார்த்தால் கண்ணம்மாவின் குழந்தை என்று தான் சொல்வார்கள் என்று கூற பாரதி கோவமடைகிறார்.

இது கண்டிப்பாக கண்ணம்மாவின் குழந்தை கிடையாது எனக்கு நன்றாக தெரியும். வெண்பாவை திட்டி தீர்க்கிறார். பாரதி அங்கிருந்து செல்ல வெண்பா இந்த பிரச்னையை எப்படி சரிக்கட்டுவது என்று குழப்பத்தில் அமர்ந்திருக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.