விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்கடுத்து சௌந்தர்யா அவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். இப்பொழுது கண்ணம்மாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறக்குமா?? அல்லது வெண்பாவின் சதியில் கண்ணம்மா சிக்கி விடுவாரா?? என்பதே ட்விஸ்டாக உள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறார் சௌந்தர்யா. இதை தெரிந்து கொண்ட வெண்பா, பாரதியிடம் கூறி கோவப்படுத்த பாரதியும், கண்ணம்மாவிடம் சென்று அனைத்தையும் கூறி இழிவாக பேச ஆசிரமத்தில் இருந்தும் வெளியேறுகிறார் கண்ணம்மா. அதன் பிறகு அவரை கடத்தியவர்களிடம் இருந்து போலீஸ் உதவியால் தப்பிக்கும் கண்ணம்மா ஓரிடத்தில் அமர்கிறார். திடீரென அவருக்கு பிரசவ வலி வரவே தாங்க முடியாமல் மயக்கமடைகிறார். ஒரு பக்கம் கண்ணம்மாவை தேடி அலையும் சௌந்தர்யா மயங்கி கிடக்கும் கண்ணம்மாவை கண்டுபிடிக்கிறார்.
கண்ணம்மாவை மருத்துவமனைக்கு விரைவாக அழைத்து செல்கிறார் சௌந்தர்யா. அங்கு சென்றால் பெரிய அதிர்ச்சியாக வெண்பாவே பிரசவம் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் சதோஷமடையும் வெண்பா பக்கத்தில் இருக்கும் நர்ஸை மருந்து வாங்க அனுப்புகிறார். இது தான் சமயம் என்று விஷ ஊசியை தயாராக வைத்திருக்கும் வெண்பா கண்ணம்மாவிற்கு போடும்போது அங்கு மறைந்திருந்த துர்கா வெளியே வந்து அந்த ஊசியை தட்டி விடுகிறார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
மேலும் அவரை மருத்துவமனையின் பின்பக்கமாக கடத்தியும் செல்கிறார். மருந்து வாங்க சென்ற சென்ற நர்ஸ் திரும்பி வந்து பார்க்கும்போது வெண்பா இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைகிறார். வேகமாக சௌந்தர்யாவிடம் சென்று அனைத்தையும் கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் சௌந்தர்யா கோபமடைந்து வெண்பாவிற்கு கால் செய்யவே அவர் எடுக்கவில்லை. மேலும் அந்த நர்ஸ் தானே கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்ப்பதாக கூற சௌந்தர்யாவும் ஒத்து கொள்கிறார்.
கண்ணம்மாவிற்கு பிரசவம் நல்ல படியாக நடந்து பெண் குழந்தை பிறக்கிறது. நர்ஸ் அதனை சௌந்தர்யாவிடம் காட்ட சந்தோஷமடைகிறார். சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணம்மாவிற்கு மறுபடியும் வலி ஏற்படுகிறது. மறுபடியும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஒரு குழந்தை வெள்ளையாகவும், மற்றொரு குழந்தை கருப்பாகவும் உள்ளது. இப்பொழுது சௌந்தர்யா தனது கணவரிடம் இந்த கருப்பான குழந்தையை நாம் வளர்க்கலாம் இது கண்ணம்மாவிற்கு தெரிய வேண்டாம் என்று கூறுகிறார். இந்த குழந்தையை பாரதியிடம் ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்த குழந்தை என்று கூறி விடலாம் என்றும் கூறுகிறார்.
மேலும் இந்த குழந்தையை பாரதியிடம் பழகிவிட்டு அதன் பிறகு இது உன் குழந்தை தான் என கூறி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வைக்கலாம் என்றும் கூறுகிறார். இதோடு இந்த எபிசோடு முடிவடைகிறது. எப்படியோ மக்கள் எதிர்பார்ப்பின் படி கண்ணம்மாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறந்துவிட்டது. இதன் பிறகு பாரதிக்கு கண்ணம்மாவை பற்றிய உண்மை தெரிய வருமா?? என்பதை வரும் எபிசோடுகளில் பொருத்திருந்து பார்ப்போம்.