ரோட்டில் விழுந்து கிடந்த வேணுவை காப்பாற்றும் கண்ணம்மா – பாரதியை சந்திப்பாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று பல பாச போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பானது. மேலும் கண்ணம்மாவை பாரதி பார்த்து விடுவாரா என்று பலரும் நினைத்து வந்த வேளையில் அதுவும் நடக்க வில்லை.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று கண்ணம்மா லட்சுமியை நல்ல ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். மேலும் இன்று முதன்முதலில் லட்சுமி ஸ்கூலுக்கு செல்கிறார். கண்ணம்மாவும், துளசியும் லட்சுமியை ஸ்கூலுக்கு ரெடி செய்கின்றனர். அப்பொழுது ஹவுஸ் ஓனர் அங்கு வர லட்சுமிக்கு பொங்கல் செய்து தருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களின் பாசத்தை கண்ணம்மா எதார்த்தமாக எடுத்துக்கொண்டாலும் துளசிக்கு சந்தேகமாகவே படுகிறது. மேலும் பாரதியின் அப்பா வேணு வழக்கம் போல வாக்கிங் சென்றுகொண்டிருக்க கம்பெனியில் எரிந்து கால் வருகிறது. அதனை கட் செய்ய மீண்டும் மீண்டும் கால் வருகிறது. இதனால் கடுப்பாகும் வேணு வேறு வழியில்லாமல் போனை எடுத்து பேசி திட்டி விடுகிறார்.

‘இந்தியாவில் போலியோவை விரட்டியது போல கொரோனாவை விரட்டுவோம்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

மேலும் அவருக்கு நிதானமும் இழக்கிறது. 2 வண்டிகள் அவர் மீது மோதி விட்டு செல்கின்றனர். அடுத்து லட்சுமி ஸ்கூலுக்கு ரெடி ஆகிறார். அடுத்ததாக சௌந்தர்யாவை காட்ட பாரதி அகிலன் மூவரும் பேசிகொண்டுள்ளனர். அப்பொழுது போனை பற்றி பேசிக்கொண்டிருக்க அதில் இன்றைய ராசி பலனை வாசிக்கிறார் அகிலன்.

அதில் சௌந்தர்யாவின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேற போவதாக சொல்ல மறுபடியும் சௌந்தர்யாவிற்கு கண்ணம்மாவின் நினைப்பு வருகிறது. அடுத்து பாரதிக்கு இந்த வாரம் முழுக்க மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் என்று வருகிறது. அதன் பிறகு லட்சுமியை சொல்லி விட்டுவிட்டு வரும் கண்ணம்மா இடையில் வேணுவை பார்க்கிறார்.

தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டு செல்கிறார். அடுத்து எதிர்பாராத விதமாக வேணுவிற்கு விபத்து ஏற்படுகிறது. ஒரு கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் போகிறது. இதனை பார்த்த கண்ணம்மா துடித்து போக அவரைவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.

மருத்துவமனையில் டாக்டரிடம் காப்பாற்றும்படி கெஞ்சுகிறார் கண்ணம்மா. அடுத்து அங்கிருக்கும் டாக்டர் இது பாரதியின் அப்பா என்று கண்டுபிடிக்கிறார். பாரதிக்கும் கால் செய்து சொல்கிறார். வெளியே கண்ணம்மாவையும் காத்திருக்க சொல்கின்றனர். இப்பொழுது பாரதி கண்ணம்மாவை பார்பாரா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here