கண்ணம்மாவை பார்த்ததாக அம்மாவிடம் கூறும் அஞ்சலி – சூடுபிடிக்கும் “பாரதி கண்ணம்மா” சீரியல்!!

0

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியல் தொடரில் கண்ணம்மா தைத்து ஹேமாவிற்கு கொடுத்த உடை நன்றாக இல்லை என்று பாரதி கூறி விடுகிறார். இதனை அடுத்து வெண்பா பாரதிக்கும் ஹேமாவிற்கும் எடுத்திருந்த டெஸ்ட் ரிபோர்டினை சௌந்தர்யா வீட்டில் வைத்து விட்டு வந்து விடுகிறார். அதே போல் அஞ்சலி தான் கண்ணம்மாவை பார்த்த விஷயத்தை தனது அம்மாவிடம் கூறுகிறார்.

ரிப்போர்ட்டை தொலைத்த வெண்பா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா கண்ணம்மா அவளுக்கு என்று தைத்து கொடுத்த உடையினை மகிழ்ச்சியாக உடுத்தி விட்டு வருகிறார். இதனை பார்க்கும் வேணு மற்றும் சௌந்தர்யாவிற்கு ஆனந்த கண்ணீர் வருகின்றது. உடை மிகவும் அழகாக இருப்பதாக சொல்கின்றனர். அங்கு வரும் பாரதி ஹேமாவின் உடையினை பார்த்து முகம் சுளிக்கிறார். இது கேவலமாக இருப்பதாக கூறுகிறார். இதனால் ஹேமாவிற்கு மனம் கஷ்ட்டப்பட்டு விடுகிறது.

14 வருடங்களுக்கு பிறகு#SAvsPAK டெஸ்ட் தொடர் – முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களை இழந்து தவிக்கும் தென் ஆப்பிரிக்கா!!

அவர்கள் அனைவரும் உடையின் அழகு அதனை உடுத்துபவரை பொறுத்தது என்று பாரதிக்கு அறிவுரை கூறி விடுகின்றனர். இப்படியாக இருக்க, வெண்பா பாரதி மற்றும் ஹேமாவிற்கு எடுத்த டிஎன்ஏ ரிப்போர்ட்டை சௌந்தர்யாவின் வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விடுகிறார். பாரதியின் குழந்தை தான் ஹேமா என்ற விஷயம் அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்து விட கூடாது என்று, அவசரமாக அங்கு செல்கிறார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, அஞ்சலி தான் கோவிலில் கண்ணம்மாவை பார்த்த விஷயத்தை கூறி விடுகிறார். அதற்கு அஞ்சலியின் அம்மா கண்ணம்மா கொஞ்ச வருடங்கள் இங்கு இல்லை என்றதும் உனக்கு கரிசனை வந்து விட்டதா என்று கேட்டுவிட்டு அஞ்சலியை அமைதியாக இருக்க சொல்லி விடுகிறார். ரிப்போர்ட்டை தேடி வந்த வெண்பா ரிப்போர்ட்டை தேடுகையில் அகிலனிடம் மாட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here