லாக்டவுனால் நிறுத்தப்படும் பாரதி கண்ணம்மா சீரியல்?? புலம்பி தவிக்கும் இல்லத்தரசிகள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா இன்னும் 2 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தான் பல உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி வருகிறது. கண்ணம்மா தான் சமையல் அம்மா என்று தெரிந்ததும் பாரதி கொந்தளிக்கிறார். ஹேமாவை தன்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள் என்றும் கதறுகிறார்.

நேற்று எபிசோடில் பாரதி பேசியது பலரையும் கண்கலங்க வைத்தது. கண்ணம்மாவுக்கும் ஹேமாவுடன் இனி பேச முடியாமல் போய் விடுமோ என்ற கவலை ஏற்பட்டு வருகிறது. எப்படி தனக்கு எல்லாம் சாதகமாக நடந்து வருகிறது என்று வெண்பா சந்தோசமாக உள்ளார்.

இந்த பாரதி எப்பொழுது திருந்தி உண்மை தெரிந்து கண்ணம்மாவுடன் சேர போகிறார் என பலரும் ஆவலுடன் இருந்தனர். இப்படி இருக்க தற்போது லாக்டவுன் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியலில் இன்னும் 2 நாட்களில் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போன வருடத்தில் கூட இந்த சமயம் தான் கண்ணம்மா கர்ப்பமாக இருந்தார். அப்பொழுது வெண்பா பாரதியிடம் இது உன் குழந்தை இல்லை என்று மனதை மாற்ற முயற்சித்தார். இதனை பாரதி மிகவும் குழப்பத்தில் இருந்தார்.

அதோடு லாக்டவுன் காரணமாக சீரியல் நிறுத்தப்பட்டது. இப்படி இருக்க தற்போது இந்த லாக்டவுனிலும் முக்கியமான சீன் வரும் வேளையில் இப்படி நிறுத்தப்பட இருப்பது ரசிகர்களை வேதனையாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here