குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.3000 வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.105 கோடியை 3,50,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பலத்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அரசு முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு தருமாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்விடுத்தார்.
கொரோனா பேரிடரால் பொருளாதாரச் சிக்கலில் இந்திய மக்கள் அனைவரும் சிக்கித் தவித்துவருகின்றனர். பல மாநில அரசுகள் தங்கள் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண உதவியை அளித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி அரசும் தம் மக்களுக்கு உதவ ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.3000 வழங்கப்படும் என்ற உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைக்க புதுச்சேரி அரசு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.3000 நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளது, மேலும் தற்போது உள்ள 3,50,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கும் திட்டத்திற்காக ரூ.105 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!