பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா தனது மகள் என்றே கண்ணம்மா அவருடன் பழகி வருகிறார். மேலும் சௌந்தர்யாவும் ஹேமா கண்ணம்மா வீட்டிற்கு சென்றதற்கு கோவமடைகிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் ஹேமா ஆடம் பிடித்து கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். ஹேமாவிற்கு கண்ணம்மா பாயசம் செய்து கொடுக்க அதனை வீட்டிற்கும் எடுத்து செல்கிறார்.
வீட்டிற்கு வரும் ஹேமா நடந்தவற்றை சொல்ல சௌந்தர்யா கோவப்பட அகிலன் வேணு எப்படியோ சமாதானப்படுத்துகின்றனர். அதன் பிறகு ஹேமா கண்ணம்மா செய்த பாயசத்தை கொடுக்க சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா நியாபகம் வருகிறது.
கண்ணம்மா வீட்டில் இருக்கும் போது நடந்தவற்றை நினைத்து பார்க்கிறார். அடுத்ததாக பாயசத்தை யாருக்கும் தெரியாமல் குடிக்க போக வேணுவும் ஹேமாவும் பார்த்து விட்டு கிண்டல் செய்கின்றனர். மேலும் அஞ்சலி அகிலன் ரொமான்ஸ் சீனை காட்டுகின்றனர்.
அடுத்து கண்ணம்மாவும் ஹவுஸ் ஓனர் பெண்ணும் காய்கறிகள் வாங்கிக்கொண்டு நிற்க கண்ணம்மா கையில் உள்ள காயத்தை பார்த்து விடுகிறார். என்ன காயம் என்று விசாரிக்க சிகரெட்டால் தன் கணவன் சூடு வைத்தது நியாபகத்திற்கு வந்து பதறுகிறார்.
எதுவும் பேசாமல் இருக்க அந்த ஹவுஸ் ஓனரே வந்து சமாளிக்கிறார். அடுத்து சௌந்தர்யா கண்ணம்மா இருக்கும் ஏரியாவிற்கு வந்து கண்ணம்மா போட்டோவை காட்டி விசாரிக்க அனைவரும் பார்த்தது போல தான் உள்ளது. ஆனால் எங்கே என்று தெரியாது என்று கூறுகின்றனர்.
அப்பொழுது பார்த்து கீழே வரும் கண்ணம்மா சௌந்தர்யாவை பார்த்து விட ஒளிந்து கொள்கிறார். இன்னும் தன்னை தேடிக்கொண்டிருக்கும் சௌந்தர்யாவை நினைத்து சந்தோஷமடைகிறார்.
தனது வாழ்நாள் முழுவதும் அந்த வீட்டிற்கு வந்த வாழ மாட்டேன் என்று நினைத்து கொள்கிறார். கண்ணம்மாவிற்கு தெரிந்தவரிடமே சௌந்தர்யா விசாரிக்க கண்ணம்மா பதட்டமடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.