8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மாவுடன் ஒன்றாக தங்கி இருக்கும் பாரதி – மனம் மாறுவாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கண்ணம்மா வீட்டிற்கு சென்றதில் இருந்து பல சுவாரசியான கட்டங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் தான் பாரதி கண்ணம்மா வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா நெடுந்தொடரில் பாரதி ஹேமாவை நினைத்து கஷ்டப்படுகிறார். இத்தனை வசதிகளை அனுபவித்து அவளால் எப்படி கண்ணம்மா வீட்டில் இருக்க முடிகிறது என்று யோசிக்கிறார். இந்நிலையில் தான் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது பாரதி ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது அந்த ஏரியாவை கொரோனாவால் அடைத்து வைக்கின்றனர். பாரதி வீட்டிற்கு கிளம்ப தயாராக வர சட்டையின் மீது சேறு படுகிறது.

ஹேமாவும், லக்ஷ்மியும் கட்டாயப்படுத்தி கண்ணம்மாவின் வீட்டில் குளிக்க வைக்கின்றனர். கண்ணம்மா சோப்பு, டவல் என ஒவ்வொன்றாக எடுத்து தருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் தங்குகின்றனர்.

மேலும் குளித்து முடித்து பாரதி வர கண்ணம்மா வெளியே நிற்பதை பார்த்து ஷாக்காகிறார். பழைய நியாபகங்கள் எல்லாம் வருகிறது. மேலும் கைலி அணிந்து தன் குழந்தைகள், மனைவியுடன் சேர்ந்து சாப்பிடுகிறார். தன் மகள்கள் என்ற உண்மை தெரியாமலேயே அனைவரும் சந்தோசமாக இருக்கும் ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here