ஹேமாவை தத்தெடுத்த பத்திரத்தை கிழித்து போடும் சௌந்தர்யா – விஷம் குடிப்பதாக மிரட்டும் பாரதி! நடக்கப்போகும் விபரீதம் என்ன??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா பாரதியுடன் அமெரிக்கா செல்ல தயாரிக்கிறார். கடைசி நேரத்தில் சௌந்தர்யா ஹேமாவை போக விடாமல் தடுக்க பல வேலைகளை செய்கிறார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாரதி அதிரடியான ஒரு முடிவை சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா யாரையும் பிரிய மனமில்லாமல் தவித்து வருகிறார். பாரதியிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர் கேட்பதாக இல்லை. ஹேமாவும், பாரதியும் தயாராகி கீழே வர சௌந்தர்யா கதறி அழுகிறார். ஹேமா சௌந்தர்யாவையும், வேணுவையும் பிரிய முடியாமல் தவிக்கிறார்.

அடுத்ததாக அஞ்சலியிடம் சென்று உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்றும் அழுகிறார். பாரதி வலுக்கட்டாயமாக ஹேமாவை பிரித்து காரில் சென்று அமர சொல்கிறார். ஹேமா கீழே சென்றது பாரதியிடம் கெஞ்சி பார்க்கிறார் சௌந்தர்யா. எதற்கும் பாரதி பிடிகொடுக்காததால் தடாலடியாக களமிறங்குகிறார்.

அதாவது ஹேமா தத்தெடுத்த பத்திரத்தை காட்டி இது தான் ஹேமாவுக்கு நீ அப்பா என்கிற ஆதாரம் என்று சொல்லி அதனை கிழிக்கிறார். இதனால் அனைவரும் ஷாக்காகின்றனர். மேலும் ஏர்போர்ட்டுக்கு வந்து இந்த குழந்தையை நீ கடத்திட்டன்னு வந்து சொல்லுவேன். அப்போ நிரூபிக்க உன்ன டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லுவாங்க.

அப்போ ஹேமாவுக்கு நீ குழந்தை இல்லைனு தெரிஞ்சுடும். அதை உன்னால தாங்க முடியுமா?? என்று கேட்கிறார். அடுத்ததாக பாரதி மேலும் குண்டை தூக்கி போடுகிறார். அதாவது நான் உங்க மகன் நீங்க இப்படிலாம் ஏதாச்சும் பண்ணுவிங்கனு எனக்கு நல்லா தெரியும்.

அதனால தான் எல்லாத்துக்கும் ரெடியா வந்தேன் என்று சொல்லி கையில் ஒரு மருந்து பாட்டிலை எடுக்கிறார். இப்போ நீங்க சொன்னதெல்லாம் தாராளமா பண்ணுங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்து இந்த மருந்தை குடிக்க நான் தயாராகிடுவேன் என்று சொல்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் ஷாக்காகிறது. பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு செல்கிறார். சௌந்தர்யா எவ்வளவு கதறியும் கேட்பதாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here