இந்தியா முழுவதும் 2021-22 நிதியாண்டில் 35,000 Freshersகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனா அலை ஏற்பட்ட தொடக்கம் முதலே இந்தியா சந்தித்த பிரச்சனைகளில் ஒன்று வேலையிழப்பு. இந்த தொற்று தற்போது குறைந்து வந்தாலும் மக்களுக்கு இயல்பு நிலை இன்னும் திரும்பிய பாடில்லை. இவ்வாறு வேலையிழப்பு ஏற்பட்ட சூழலில் கல்லூரி மாணவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது பெரிய சிரமமாக உள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்க உள்ளது. ஆம், இன்போசிஸ் நிறுவனம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 35,000 கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே இன்போசிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 20,000 பேருக்கும் இந்த காலாண்டில் சுமார் 8300 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கியது. தற்போது மேலும் இன்போசிஸ், 35,000 புதிய பணியாளர்களை எடுக்க உள்ளதாக வெளிவந்துள்ள இந்த செய்தியால் வேலைதேடுவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்