கொரோனா தொற்றை விட படு வேகமாக அதிகரிக்கும் பெட்ரோல் விலை…!துயரத்தில் வாகன ஓட்டிகள்!!!

0

தினசரி புது புது உச்சத்தை தொட்டு மக்களுக்கு அதிர்ச்சியை தந்து  வருவது  கொரோனா மட்டுமல்ல பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் தான்.  அதன் அடிப்படையில் இன்று சென்னையில்  பெட்ரோல் நேற்றைய விலையை விட லிட்டருக்கு 31 காசுகள் மற்றும் டீசல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று மக்களுக்கு பல இன்னல்களை தருகிறது என்றால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் அதன் பங்கிற்கு  மக்களை  பாடாய் படுத்துகிறது. இருப்பினும் தொற்று பரவல் சற்று குறைந்து வந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல்  தினசரி அதன் விலையில் புது புது உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. அதாவது கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலை இமாலய உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போது உள்ள இதன் விலை ஏற்றத்தை எதிர்த்து  ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றாலும் இதன் விலை குறைந்தபாடில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  விலைக்கு ஏற்ப  எண்ணெய் நிறுவனங்களே தினமும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன் அடிப்படையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையை விட முறையே 31 காசுகள் மற்றும் 15 காசுகள் உயர்த்தி உள்ளனர். அதாவது  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.23க்கும் மற்றும் ரூ.94.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மக்களை மிகுந்த துயரில் ஆழ்த்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here