திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகளின் வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணை அவரது குடும்பத்தினர் சூடு வைத்து பல கொடுமைகள் செய்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியவந்த நிலையில் மகளிர் காவல் நிலையம் எம்எல்ஏவின் மகன் & மருமகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் பிறகு போலீசில் ஆஜராக மறுத்த எம்எல்ஏவின் மகன் & மகள் தலைமறைவானவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து தாங்கள் போலீசில் ஆஜராகும் பட்சத்தில் உடனடி ஜாமீன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் காவல் துறையினரிடம் எம்எல்ஏவின் மகனுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எம்எல்ஏ மகனின் ஜாமீன் மனு குறித்து பிப்ரவரி 6 தேதி தீர்ப்பு வழங்குவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.