தமிழ் திரையுலகில் முக்கிய பல படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பு இருக்க இதனால் அவருக்கு பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படி இருக்க சமீப காலமாக அவர் குறித்த சர்ச்சை பூதாகரமாக பேசப்பட்டது. அதாவது 25 வயது ஷீத்தல் என்பவரை 50 வயதான ப்ரித்வி காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்தார். இது பெரும் பேசும் பொருளாக அமைந்தது. நெட்டிசன்கள் பலரும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இப்படி இருக்க இந்த ஜோடி தற்போது பிரிந்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து ஷீத்தல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, நாங்கள் காதலித்து உண்மை தான்.
ஆனால் இப்பொழுது பிரிந்து விட்டோம், நாங்கள் திருமணம் செய்யவில்லை லிவிங் டுகெதரில் தான் வாழ்ந்தோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.., எங்களின் இந்த பிரிவை மதித்து அனைவரும் எங்களுக்கு அதற்கான நேரத்தையும் கொடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.