பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் KYC-களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரையிலும் KYC சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு, மார்ச் 19 (நாளை) வரை கால அவகாசம் வழங்கி இருந்தனர்.
இந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ளதால் இதுவரை KYC சரிபார்ப்பை முடிக்காதவர்கள் புகைப்படம், ஐடி, பான் கார்டு உள்ளிட்ட KYC பணியை வங்கிக்கு நேரடியாக சென்றோ அல்லது PNB ஆப் மூலமாகவோ மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால், அந்த வாடிக்கையாளர்களின் கணக்கு முடக்கப்படவும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யுபிஐ பயனாளர்களே., Gpay, போன்பே-வை ஓரங்கட்டும் ஜியோபே? ஜியோ நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு!!!